Tamil News
Home செய்திகள் இன்று முதல் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு

இன்று முதல் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று (01) முதல் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுபிட்சத்தின் நோக்கு´ என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படவுள்ளது .

குறித்த விடயம் தொடர்பில் சிறிலங்கா அரச தலைவரால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கும் கடந்த 14 ஆம் திகதி அனுமதி கிடைத்தாக அரசாங்கம் அறிவித்தது.

இதேவேளை சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1500 ரூபா அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Exit mobile version