Tamil News
Home செய்திகள் வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்திய இராணுவத்தின் செயற்பாடு! அச்சத்துடன் நடமாடும் மக்கள்!

வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்திய இராணுவத்தின் செயற்பாடு! அச்சத்துடன் நடமாடும் மக்கள்!

வவுனியாவில் திடீரென புதிய சோதனைச் சாவடி அமைத்து இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருமன்காடு சந்தியில் இராணுவத்தினர் சோதனைச் சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வாகன இலக்கங்கள், வாகன சாரதிகளின் அனுமதி பத்திரம் என்பவற்றையும் பதிவு செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப் படுகின்றது.

திடீரென அமைக்கப்பட்ட சோதனை சாவடியால் குருமன்காட்டு சந்தியில் சற்று நேரம் பதட்டமான நிலை காணப்படுவதுடன் புதிய சோதனைச் சாவடியால் மக்கள் அச்சத்துடன் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஊடகவியலாளர்கள் சோதனை நடவடிக்கையினை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு இராணுவத்தினர் தடை விதித்ததுடன் எடுக்கப்பட்ட காணொளிகளை அழிக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தனர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version