இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் கத்தியால் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸார் தரப்பில், “இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கையில் பெரிய கத்தியுடன் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். இதில் 5 பேர் காயமடைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளதாகமாகவும், இந்தத் தாக்குதலின் பின்னணி நோக்கம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.