887 பேருக்கு நேற்று கொரோனா உறுதி – மரணமானோர் எண்ணிக்கை 276 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நேற்று மாத்திரம் 887 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 76 ஆகஅதிகரித்துள்ளது.

இவர்களில் 47 ஆயிரத்து 984 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 7 ஆயிரத்து 816 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.

பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவரும், அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவருமே இறுதியாக உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.