Home செய்திகள் பூஸா சிறையில் 768  பேர் கொரோனாவால் பாதிப்பு

பூஸா சிறையில் 768  பேர் கொரோனாவால் பாதிப்பு

hacker jail பூஸா சிறையில் 768  பேர் கொரோனாவால் பாதிப்பு

பூஸா சிறையில் தனிமைப் படுத்தப்பட்ட 51 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி யுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கைதிகள் காலி மற்றும் களுத்துறை மாவட்ட நீதிமன்றங்களால் விளக்க மறியலுக்கு உட்படுத்தப் பட்ட கைதிகளாவர்.

நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையிலேயே தொற்று இருப்பது உறுதியாகி யுள்ளது. அவர்களில் 34 கைதிகள் அங்குணுகொல பெலஸ்ஸ சிகிச்சை நிலையத்துக்கும் மீதமுள்ள 17 பேரும் பூசா சிறைக்கும் மாற்றப் பட்டுள்ளனர்.

சிறையில் கொரோனாவால் பாதிக்கப் பட்ட மொத்த கைதிகளின் எண்ணிக்கை இதுவரை 768ஆக உயர்ந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

Exit mobile version