பாகிஸ்தானை சேர்ந்த 709 பேர் இலங்கையில் அகதிகளாக தஞ்சம்

குடிவரவுத் திணைக்களத்தின் 2021 அறிக்கையின்படி, 912 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக இலங்கையில் அகதிகளாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர்  பாகிஸ்தானை  சேர்ந்தவர்களாவர். அவர்களின்  எண்ணிக்கை 709 ஆகும். மேலும், 113 ஆப்கானிஸ்தான் பிரஜைகள், 24 ஈரானிய பிரஜைகள், 6 பாலஸ்தீனியர்கள், 4  சூடான் பிரஜைகள்,  15  யேமன் பிரஜைகள், 35  மியான்மர் பிரஜைகள் மற்றும் பங்களாதேஷ், எரித்திரியா மற்றும் சோமாலியாவைச் சேர்ந்த தலா ஒருவர்  என அகதிகளாக இந்நாட்டில் தங்கியிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

அகதிகள் விவகாரப் பிரிவின் மேற்பார்வையிலேயே இந்தக் குழு இலங்கையில் தங்கியுள்ளது.