Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 07 பேர் கடல் வழியாக தமிழகத்திற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து கூட்டி செல்லப்பட்ட 07 பேரை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஐந்தாம் மணல் திட்டில் இறக்கி விட்டு படகோட்டிகள் தப்பி சென்ற நிலையில் தகவல் அறிந்த தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் அவர்களை மீட்டு , மண்டபம் கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும் , திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வருமே தமிழகம் சென்றுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி, இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 123 பேர் தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

Exit mobile version