7 ஆம் திகதி இந்தியா பயணமாகும் மகிந்த! இந்தியப் பிரதமருடன் விரிவான பேச்சு

சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா செல்கிறார். எதிர்வரும் 7ஆம் திகதி இந்தியா செல்லும் ராஜபக்ஷ, 8ஆம் திகதி தலைநகர் டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.

11 ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ராஜபக்ஷ, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது வாரணாசி, சர்னத், புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கும் மஹிந்த செல்ல இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.