60 பேரடங்கிய குழு வத்திக்கான் பயணம்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரி கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் 60 பேரடங்கிய குழு இன்று வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது.
இவ்வாறு வத்திக்கான் புறப்பட்டுள்ள குழுவில் ஏப்-21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் உள்ளடங்கியுள்ளனர்.
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமைய, போராயர் தலைமையிலான குறித்த குழுவினர் வத்திக்கான் பயணமாகியுள்ளனர்.