மேலும் 6 இலங்கையர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

தனுஷ்கோடி – கம்பிபாடு கடற்கரையை சென்றடைந்த 6 பேரையும் இராமேஸ்வரம் கடற்கரை  காவல்துறையினர்,  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி – பளை பகுதியைச் சேர்ந்த 6 பேரே அகதிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து  100க்கும் மேற்பட்டவர்கள்  தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.