IMF கடன் மறுசீரமைப்பின் கீழ் சுமார் 6 இலட்சம் அரச ஊழியர்கள் வேலை இழக்கலாம்

IMF கடன் மறுசீரமைப்பின் கீழ் சுமார் 6 இலட்சம் அரச ஊழியர்கள் வேலை இழக்கலாம். முடிவில் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இல்லாமல் போகும்..!

பெரும்பாலும் எல்லா பெட்ரோலிய பொருட்களின் விலைகளும் சுமார் 30% வீதத்தால்  இரவில் அதிகரிக்கப்பட்டிருக்குறது.

வாழ்ந்தால் வாழுங்கள் இல்லையேல் செத்து மடியுங்கள் என்பது போலதான் இருக்குறது இந்த அதிகரிப்பு. இந்த விலை அதிகரிப்பின் தொடர்ச்சியாக மற்ற  எல்லா பொருட்களும் சேவைகளும் மேலும் விலை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மின்சார கட்டணம் 100 வீதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்த விலையேற்றங்கள்  மொத்த சனத்தொகையின் சுமார்  70-80 வீதமான மக்களை நேரடியாக பாதிக்கும்  அவர்களால் வயிற்றுப்பசி, தொழிலுக்கு  சென்றுவரும் செலவு என்பவற்றை தவிர வேறு எதனையும் சிந்திக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடும்.

உண்மை என்னவெனில்,  இந்த விலையேற்றங்கள் எதனையும் கட்டுப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை. IMF உடனான பேச்சுவார்த்தைகள், அதிகாரிகள் மட்டத்தை தாண்டவில்லை. இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு நம்பிக்கை தரும் அளவுக்கு வர 6-8  மாதங்கள் எடுக்கலாம். இந்த கால பகுதியில் அரசாங்கம் எந்தவித விலை கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்க முடியாது, அது பொதுவாக IMF உடன் ஒரு பேச்சுவார்த்தையை தொடங்க முன் இருக்கும் ஆரம்ப நிபந்தனையாகும், அதனைத்தான் அரசாங்கம் இப்போது செயல்படுத்துகிறது.

IMF  அனுசரணையில் கடன் மீளமைப்பு பேச்சுக்களை தொடங்க  சட்ட உதவிக்காக Clifford Chance என்ற நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. நிதித்துறை ஆலோசனை உதவிகளை வழங்க பிரெஞ்சு நிறுவனமான  Lazard நியமிக்கப்பட்டுள்ளது.

பேச்சுக்களை தொடங்க முன் நிபந்தனையாக எரிபொருட்களுக்கான எல்லா சலுகலைகளையும் நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்படும் என்று இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்க்கு மேலதிகமாக அரச ஊழியர்களின் எண்ணிக்கையை  அரைவாசியாக குறைக்கும் நிலை ஏற்படலாம்.

அரச செலவீனத்தை கடுமையாக குறைக்காமல் எந்தவொரு நீடித்து நிலைக்கும் கடன் மீளமைப்பும் இலங்கையில் சாத்தியமில்லை என்று முன்னதாக  IMF தெரிவித்து இருந்தது. எரிபொருள் சேமிப்பை காரணம் காட்டி அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் வேலைக்கு அழைத்தல்  என்பது ஒரு பாரிய வேலைநீக்க திட்டத்தின் முதல் கட்டம் என்பது தெளிவாக தெரிகிறது.

கல்வி துறை , சுகாதார சிற்றூழியர்கள் மட்டும் இன்றி – குறிப்பாக மின்சார சபை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் போன்ற அரச நிறுவனங்களில் பாரிய வேலை நீக்கங்கள் காத்திருக்கியன்றன.

2017 ஆம் ஆண்டு சுமார் 1.49 மில்லியனாக இருந்த அரச ஊழியர்கள் 2021 இல் 2 மில்லியனயாக அதிகதித்தது -இதில் பெரும் எண்ணிக்கை அரசியல் காரணங்களுக்காக  வழங்கப்பட்ட நியமனங்கள்.

இலங்கையின் ஏற்படும் சமூக கொந்தளிப்பு IMF உடனான பேச்சுக்களை தாமதப்படுத்தலாம் – பாதுகாப்பு செலவீனங்களை குறைத்து-ராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்குமாறு கோரப்பட்டால் மொத்த பேச்சுவார்த்தையும் தரை மட்டம் ஆகும் ம்வாய்ப்பு கூட இருக்குறது. -ராணுவ செலவீனத்தில் கைவைக்க கோத்தபாய விரும்பப்போவதில்லை-அதேநேரம் யுத்தம் இல்லாத ஒரு வாங்கறோத்து நாடு 3-4 லட்சம் ராணுவத்துக்கு கொழுத்த சம்பளத்தை வழங்க IMF கடன் கொடுக்கப்போவதும் இல்லை.

ஆனால் ஒரு நாடு கடனில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து -சுவரில் முதுகு வரை அழுத்தப்படும் ஒரு நிலைக்கு வந்ததும் ( “Governments are often willing to do the things that are required when their backs are completely against the wall.”)  அரசாங்கங்கள் பொதுவாக கடினமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும்”  என்று இப்படியான கடன் மீளமைப்புக்கள்  தொடர்பில் ஆராயும் Gramercy’s என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர் Petar Atanasov முன்னதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்து இருந்தார்.

இந்திய கடனுதவி முடிவுக்கு வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு அடுத்து வரும் மாதங்களை கொண்டு நடத்த கடைசியாக ஒரு வாசல் மட்டுமே மீதமுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி -உலகவங்கி ஆகிய அமைப்புக்கள் ஏற்கனவே இலங்கையில் அனுமதித்த  அபிவிருத்தி திட்டங்களுக்காக வழங்கப்பட்ட சுமார் 1100 மில்லியன் டொலர் நிதி இலங்கையின் கைவசம் இருக்குறது.

இந்த நிதி சட்ட ரீதியில் குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது,  ஆனால் இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு சில கொள்கை ரீதியிலான தளர்வுகளை மேற்கொள்ள இந்த இரண்டு வங்கிகளும் உடன்பாடு தெரிவிக்கலாம் என்று நம்பப்படுகிறது . ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது ஆனாலும் இந்த பணத்தை  எரிபொருள் இறக்குமதிக்கு பயன்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ள நிலையில்,  மருந்து மற்றும் உணவுக்ககாக அது பயன்படலாம்.

மிகவும் சிக்கல் நிறைந்த ஒரு கடன் மீளமைப்பு பேச்சுக்களுக்கு பின்னர் IMF ன்   நேரடி நிதி உதவி கிடைக்க  நீண்ட காலம் எடுக்கலாம்.  சீனா  ஏற்கனவே தனது  கடனை IMF திட்டத்தின் கீழ் மீளமைப்பதை கடுமையாக எதிர்க்கும் நிலையில் இலங்கையின் கடன் மறு  சீரமைப்பு என்பது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை.  இலங்கையை விட சிக்கல் குறைந்த ஒரு கடன் மறுசீரமைப்பை அன்மையில்  ஆபிரிக்க நாடான கம்பியா மேற்கொண்டது – கம்பியா ஒரு  ஒப்பந்தம் வரை செல்ல 2 ஆண்டுகள் எடுத்தன.

இந்த பேச்சுவார்த்தைகள் முடியும் போது உணவுக்கு வழியில்லாத கடுமையான ஏழைகள் என்று ஒரு பகுதியும்,  அரசியலோடும் பெரும் முதலாளித்துவ வர்த்தகத்தோடும் தொடர்பு பட்ட ஒரு பணக்கார சமூகமுமாக,  இலங்கை தெளிவான  இரண்டு கோடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும் -நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இருக்காது- பொதுவாகவே இப்படியான எல்லையற்ற ஊழல் -கடன் மற்றும் மூலதன சுரண்டல்களின்  முடிவு அப்படிதான் அமையும் என்பதை வரலாறு திரும்ப  திரும்ப சொல்கிறது.

நன்றி-உண்மை உரைகல் Tamil News