ஒரு மணித்தியாலத்தில் 5 மரணங்கள் – உடனடியாக நாட்டை முடக்கவும்

gmoa ஒரு மணித்தியாலத்தில் 5 மரணங்கள் – உடனடியாக நாட்டை முடக்கவும்

இலங்கையில் கொரோனா தொற்றால் ஒவ்வொரு மணி நேரத்திலும் ஐந்து பேர் மரணிக்கின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 42 ஆயிரத்து 79 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரச  மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“டெல்டா கொரோனா மிக வேகமாகப் பரவும் மோசமான சூழ்நிலையில் நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் இன்று வரை ஒவ்வொரு மணி நேரத்திலும் ஐந்து பேர் கொரோனா தொற்றால் மரணிக்கின்றனர்.

பொருளாதாரம் என்ற பெயரில் நாட்டை முடக்கத் தீர்மானம் எடுப்பதில் தாமதமாகும் ஒவ்வொரு நாளும், டெல்டா கொரோனா வைரஸ் மிக வேகமாக ‘நாடு முழுவதும் பரவி’ நாட்டில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வைத்திய சாலைகளின் கொள்ளளவு திறனை மீறும் சந்தர்ப்பம் ஏற்படலாம் என்றும் நாட்டை முடக்குவது தொடர்பாகத் தீர்மானம் எடுப்பதில் தாமதப்படுத்துவோர் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும்.

தற்போது வைத்திய சாலைகளில் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிப்பதால் நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசன் அதிகபட்ச கொள்ளவை எட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்றும் அதனால் ஒட்சிசனை இறக்குமதி செய்வதன் தேவை ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரத்துக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும்.

இன்று நாங்கள் எதிர்கொள்ளும் கொரோனா தொற்று நோய்க்கு ​​உலகின் ஏனைய நாடுகள் பின்பற்றும் உத்திகளை நாங்கள் கவனத்தில் எடுப்பது அவசியமாகும் என்றும்  தொற்று நோய் மற்றும் சமூக மருத்துவத்தின் அறிவியல் முறைகள் மூலம் வைரஸ் பரவுவதைக் கட்டுப் படுத்துவதற்குப் பதிலாக, விஞ்ஞான ரீதியில் அல்லாத ஏனைய கருத்துகள் தோன்றினால் இந்த நிலைமை மேலும் சிக்கலாக அமையும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021