Tamil News
Home செய்திகள் வடக்கை அச்சுறுத்தும் கொரோனா – நேற்று 28 பேருக்கு தொற்று! இரண்டு பேர் மரணம்

வடக்கை அச்சுறுத்தும் கொரோனா – நேற்று 28 பேருக்கு தொற்று! இரண்டு பேர் மரணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்குக்கு கொரோ னா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வு கூடங்களில் 807 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 பேரும், கிளிநொச்சியில் 7 பேரும், முல்லைத்தீவில் ஒருவரும் என 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்குக் கொரோனாத் நோய்த்தொற்று உள்ளது என உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நான்கு பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் ல்வரும் தொற்றாளர்களுடன் முதல் நிலைத் தொடர்புடையவர்கள். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரில் இருவர் தொற்றாளர்களுடன் முதல்நிலையத் தொடர்புடையவர்கள். இருவர் வீதிப் புனரமைப்புப்பணியில் ஈடுபடுவர்கள்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற 7 பேருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்குச் சிகிச்சைக்குச் சென்ற ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரண்டு வயோதிபர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண். மற்றையவர் இளவாலையைச் சேர்ந்த 75 வயதுடைய பெண். இதன்மூலம் கொரோனாத் தொற்றால் யாழ்ப்பாணத்தில் 21 பேரும், வடக்கு மாகாணத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Exit mobile version