ஏழு நாட்களாக கடலில் காத்திருந்த 471 குடியேறிகள் இத்தாலியில் தரையிறங்க அனுமதி

லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பியாவை அடையும் முயற்சியில்  ஈடுபட்டு கடலில் ஆபத்த நிலையில் நூற்றுக்கணக்கான குடியேறிகள் சிக்கியிருந்திருக்கின்றனர்.

இவ்வாறு சிக்கியிருந்த 471 குடியேறிகளை தனது கப்பல் மூலம் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு மீட்டிருந்தது.
இவர்களை இத்தாலியில் தரையிறக்க கடந்த ஏழு நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களை Sicily துறைமுகத்தில் தரையிறக்க இத்தாலி அனுமதித்துள்ளது.

Tamil News