ஆப்கானிஸ்தான் வன்முறை 460 குழந்தைகள்  6 மாதங்களில் பலி- UNICEF

ஆப்கானிஸ்தான் வன்முறை

ஆப்கானிஸ்தான் வன்முறை 460 குழந்தைகள்  6 மாதங்களில் பலி: ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 460  குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குந்தூஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக பலியாகியுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக UNICEF கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் 460  குழந்தைகள் குண்டுவெடிப்பில் பலியானது கவலை அளிப்பதாக UNICEF கூறி உள்ளது. வறுமை, உணவுப் பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்  கவலை தெரிவித்துள்ளது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad ஆப்கானிஸ்தான் வன்முறை 460 குழந்தைகள்  6 மாதங்களில் பலி- UNICEF