Home உலகச் செய்திகள் உக்ரைனில் 4.8 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்வு – யுனிசெஃப்

உக்ரைனில் 4.8 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்வு – யுனிசெஃப்

குழந்தைகள் இடம்பெயர்வு

உக்ரைனில் 4.8 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்வு

உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 6 வாரங்களில் உக்ரைனிய குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF)  தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து திரும்பிய யுனிசெப்பின் அவசரகால திட்ட இயக்குனர்  மேனுவல் ஃபோன்டைன், ” உக்ரைனில் 7.5 மில்லியன் குழந்தைகளில் 4.8  மில்லியன் பேர் மிகக் குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்திருப்பது, 31 வருட மனிதாபிமானப் பணியில் நடந்ததை பார்க்காத ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தங்கள் வீடுகளில் தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்ட 3.2 மில்லியன் குழந்தைகளில், ஏறக்குறைய பாதி பேர் போதிய உணவு இல்லாமல் ஆபத்தில் உள்ளனர்” என்று ஃபோன்டைன் ஐ.நா. பாதுகாப்பு சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 மேலும்  உக்ரைனில் ஐ.நா தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷ்யா 1,21,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை உக்ரைனில் இருந்து அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறி, தத்தெடுப்பு நடைமுறைகளை எளிதாக்குவதற்கும்  விரைவுபடுத்துவதற்கும் ஒரு மசோதாவைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை “எந்த ஆதாரமும் இல்லை”, ஆனால் UNICEF இந்த விஷயத்தை விசாரிக்கும் என்று ஃபோன்டைன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version