Tamil News
Home செய்திகள் தாய்லாந்து குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச் சூடு – 38 பேர் உயிரிழப்பு

தாய்லாந்து குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச் சூடு – 38 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பகல் நேர குழந்தை பராமரிப்பு மையத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்தின் வட கிழக்கு மாவட்டமான நாங் புவா லம்புவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிதாரி முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை இரண்டு வயது குழந்தை உட்பட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version