Home செய்திகள் உடகவியலாளர்கள் மூவர் உட்பட 37 பேர் காயம் – காவல்துறையினரின் வாகனங்களும் தீக்கிரை

உடகவியலாளர்கள் மூவர் உட்பட 37 பேர் காயம் – காவல்துறையினரின் வாகனங்களும் தீக்கிரை

உடகவியலாளர்கள் மூவர் உட்பட 37 பேர் காயம்

கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தை முற்றுகையிட்டு நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் உடகவியலாளர்கள் மூவர் உட்பட 37 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கொழும்பு – நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற மக்களுக்கும் – பாதுகாப்பு படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 35 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் 17 பேர், உதவி காவல்துறை அதிகாரிடன் காவல்துறையினர் ஐவர் உட்பட பாதுகாப்பு படையினர் 17 பேர் மற்றும் 3 பத்திரிகையாளர்களும் காயமடைந்துள்ளனர்.

மோதலின் போது ஒரு காவல்துறை பேருந்து, ஒரு காவல்துறை ஜீப், 2 போக்குவரத்து காவல்துறையிர் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை வாகனமும் சேதப்படுத்தப்பட்டது.

Exit mobile version