’20’ க்குள் உள்ளடங்கும் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் தனியாக நடைபெற்ற வாக்கெடுப்பு

20 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான 17 ஆவது சரத்து குறித்து எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பை வெளியிட்டதோடு தனியான வாக்கெடுப்பொன்றையும் கோரினர்.

இந்த நிலையில், சபாநாயகரின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட தனியான வாக்கெடுப்பின் 17 ஆவது சரத்து தொடர்பில் ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் கிடைத்தன. இதற்கமைய, 17 ஆவது சரத்து 92 மேலதிக வாக்குகளினால் திருத்தங்கள் இன்றி 20ஆவது திருத்தச் சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டது. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகள் 213 ஆகும்.

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சரத்து ஒன்றுக்கான வாக்கெடுப்புஇடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.