Home செய்திகள் 5 குடும்பங்களை சேர்ந்த 19 ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்

5 குடும்பங்களை சேர்ந்த 19 ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்

19 ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்

19 ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையின் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஐந்து குடும்பங்களை சேர்ந்த 19 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு மன்னார் கடற்பகுதியில் இருந்து புறப்பட்ட ஒன்பது பேர் இராமேஸ்வரம் மண்டபம் பகுதிக்கு நேரடியாகவே சென்றுள்ளனர்.

\கைக்குழந்தையுடன் பெண்கள் இருவர் உள்ளிட்ட ஒன்பது பேரும் மண்டபம் பகுதி கடற்கரையில் இறங்கிய போது அங்கிருந்தவர்கள் மூலம் மண்டபம் அகதிகள் முகாமிற்கு செல்லும் வழியை கேட்டறிந்து கால் நடையாகவே முகாமை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து அகதிகளாக புறப்பட்டவர்கள் கடல்வழியாக தமிழகத்திற்குள் உள் நுழைந்ததுடன் கால் நடையாகவே மண்டம் அகதிகள் முகாமை சென்றடைந்தமை தமிழக அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்டபம் முகாமில் வைத்து இவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தை சேர்ந்த மேலும் 10 பேர் இன்று அதிகாலை தமிழகத்தை சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு ஐந்து குடும்பங்களை சேர்ந்த 19 பேர் ஒரே நாளில் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version