ஒரே நாளில் 171 பேர் உயிரிழப்பு; நாளாந்தம் உச்சம் தொடும் பலியெடுப்பு

Corona Dead 8 ஒரே நாளில் 171 பேர் உயிரிழப்பு; நாளாந்தம் உச்சம் தொடும் பலியெடுப்புஇலங்கையில் மேலும் 171 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர். இதுவே இதுவரை ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கையாகும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த மரணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம் உயிரிழந்த 171 பேரில் 102 ஆண்களும், 69 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதில் ஆண்கள் இருவர் 30 வயதுக்குட்பட்டவர். 23 ஆண்கள், 12 பெண்கள் என 35 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 134 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 77 ஆண்களும், 57 பெண்களும் அடங்குகின்றனர்.

ilakku-weekly-epaper-143-august-15-2021