கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இக்கடன் ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் சென்சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
கோவிட் தடுப்பூசிகளுக்கான செலவு, தடுப்பூசி அடிப்படையான கண்காணிப்பு பொறிமுறைகளை நிறுவுதல், குளிரூட்டப்பட்ட போக்குவரத்து வசதிகள் மற்றும் மருத்துவ கழிவு முகாமைத்துவம் ஆகிய நடவடிக்கைகளுக்கு இந்தக் கடன்கள் ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.