13வது திருத்தத்தை தமிழர்களுக்கான தீர்வாக ஏற்க முடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

13வது திருத்தத்தை தமிழர்களுக்கான

தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க நினைக்கும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவான 13வது திருத்தத்தை தமிழர்களுக்கான தீர்வாக நாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், 30 வருடங்களுக்கு மேலாக நடைமுறைப்படுத்த முடியாத 13ம் திருத்தத்தைச் சிலர் தமது எஜமான்களைத் திருப்திப்படுத்துவதற்காக நினைத்து தமிழ் மக்களை ஒற்றையாட்சியின் கீழ் கட்டுப்படுத்தலாம் என முயற்சிக்கின்றனர் எனவும்  கூறியுள்ளார்.