இலங்கையில் இது வரையில் 13,950  பேர் கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழப்பு

கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழப்பு

இலங்கையில்  கொரோனாத் தொற்றுக் காரணமாக 23 பேர் மேலும் உயிரிழந்துள்ளதாக   சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் (11) இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் இதுவரை  கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 13,950 ஆக உயர்வடைந்துள்ளது.

அதே நேரம் இது வரையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 548,784 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.