வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் புதிதாக நியமனம் – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மத்திய சுகாதார அமைச்சினால் உள்ளக பயிற்சியை நிறைவுசெய்த வைத்திய அதிகாரிகளுக்கு கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 132 வைத்திய அதிகாரிகள் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள்.

இதில் யாழ் மாவட்டத்திற்கு 23 வைத்திய அதிகாரிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும், வவுனியா மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும், மன்னார் மாவட்டத்திற்கு 35 வைத்திய  அதிகாரிகளும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 31 வைத்திய அதிகாரிகளும் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.