Home செய்திகள் மன்னாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

மன்னாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

தமிழ்நாட்டுக்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

தமிழ்நாட்டுக்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

இலங்கை: மன்னாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு செல்ல முயன்ற 12 பேர் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மன்னார் மடு தேக்கம் பகுதியைச் சேர்ந்த பத்து மாத கைக் குழந்தையுடன் இளம் குடும்பம் ஒன்றும், பேசாலை பகுதியைச் சேர்ந்த 7 நபர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்தும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பெண்கள்   சட்டவிரோதமாக படகில் தமிழகத்திற்கு சென்ற வேளை, இலங்கைக்கு சொந்தமான தீடை பகுதியில் இறக்கி விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 பேரும் இன்று சனிக்கிழமை (08) மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H ஹைபதுல்லா இரு சிறுவர்களையும் பொற்றோரிடம் ஒப்படைக்குமாறும், ஏனைய 10 பேரையும் சுமார் ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

Exit mobile version