Tamil News
Home செய்திகள் 12 இடங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகள் – மேல் மாகாணத்தில் விசேட செயற்பாடு

12 இடங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகள் – மேல் மாகாணத்தில் விசேட செயற்பாடு

தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மேல் மாகாணத்தைவிட்டு வெளியேறும் நபர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் 12 இடங்களில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்ட பொது இடங்கள், பொதுச் சந்தைகள், மீன் விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் ஏனைய பொருளாதார மத்திய நிலையங்களிலும் துரித அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version