இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம் – 118 பேர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 118 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி – கலஹ பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஒருவரும், அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளனர். கண்டியில் பதிவாகியுள்ள முதலாவது மரணம் இதுவாகும்.

இதேவேளை, இலங்கையில் நேற்றும் 503 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 309 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.