Tamil News
Home செய்திகள் இலங்கையில் சீரற்ற காலநிலை- 10 ஆயிரம் பேர் பாதிப்பு

இலங்கையில் சீரற்ற காலநிலை- 10 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களில் 2,729 குடும்பங்களைச் சேர்ந்த 10,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச்  சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நேற்று காலை 2 பேர் காயமடைந்துள்ளனர்.

69 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் 09 தற்காலிக பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version