அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக 09 மனுக்கள் தாக்கல்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட ஒன்பது பேரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.