Tamil News
Home செய்திகள் ஸ்ரீலங்கா சிவில் பாதுகாப்பு படை சிப்பாயால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

ஸ்ரீலங்கா சிவில் பாதுகாப்பு படை சிப்பாயால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ம் கட்டை பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று சிறுமியின் தந்தை முறைப்பாடு செய்ததையடுத்தே இன்று சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கன்தலாவ உப சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி வரும் கந்தளாய், வெண்றாசன்புர பகுதியைச் சேர்ந்த கபில ஜயசூரிய 40 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,கைது செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு படை வீரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version