Tamil News
Home செய்திகள் ஸ்ரீலங்காவில் கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

ஸ்ரீலங்காவில் கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

இலங்கையில் இதுவரை பதிவாகிய கொரோனா நோயாளிகள் 59 பேரில் 25 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த 25 பேரில் 22 பேர் இத்தாலியில் இருந்து வந்தவர்களாகும். மற்ற இருவர் பிரித்தானியாவில் இருந்து வந்த நிலையில் ஒருவர் இந்தியாவில் இருந்து வந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அடையாளம் காணப்பட்ட 20 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2463 ஆகும் அவர்களில் 27 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட அறிவித்தலுக்கமைய மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களில் 8437 பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்துக் கொண்டவர்களாகும்.

Exit mobile version