Tamil News
Home செய்திகள் இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் கைது

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 31 பொலிஸ் பிரிவுகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version