Tamil News
Home செய்திகள் வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க யாழில் முக்கிய நடவடிக்கை!

வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க யாழில் முக்கிய நடவடிக்கை!

வலி மேற்கில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உழவர் சந்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் வலி மேற்கில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உழவர் சந்தைகள் நாளை முதல் பின்வரும் இடங்களில் செயற்படவுள்ளது.

சங்கானை
1.சங்கானை உப அலுவலகம் முன் உள்ள டச்சு கோட்டை

2.கூடத்து அம்மன் கோயில் மேற்கு புற மைதானம்

3.சிலம்புப்பளியடி பிள்ளையார் கோயில் வீதி

4.சங்கானை நிகரவைரவர் கோயில் வீதி

5.சலேசியார் கோயில் வீதி

சுழிபுரம்
1.சத்தியக்காட்டு சந்தைகள்

2.தொல்புரம் மத்திய சந்தைகள்

3.பனிப்புலம் சந்தை

4.பொன்னாலை பனையடி சந்தை

அராலி
1.அராலி செட்டியார்மட சந்தை

2.அராலி உப அலுவலகம் முன்பாகவுள்ள கருப்பட்டி பிள்ளையார் கோயில் பின் வீதி

வட்டுக்கோட்டை
1.வட்டுக்கோட்டை பொதுச்சந்தை

2.சக்கரத்தை பொதுச்சந்தை

Exit mobile version