Tamil News
Home செய்திகள் வேகமாக அதிகரிக்கும் யாழ். சிறைத் தொற்றாளர்கள் – மேலும் 6 கைதிகளுக்கு கொரோனா

வேகமாக அதிகரிக்கும் யாழ். சிறைத் தொற்றாளர்கள் – மேலும் 6 கைதிகளுக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 6 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 451 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 81 வயது வயோதிபப் பெண்ணுக்கு அறிகுறிகள் இருந்தமையால் மாதிரிகள் பெறப்பட்டன. அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 15 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது” என்றார்.

Exit mobile version