Tamil News
Home செய்திகள் வெள்ளை வேன் முதலாளி கோத்தாவே வெளியேறு -யாழில் ஆர்ப்பாட்டம்

வெள்ளை வேன் முதலாளி கோத்தாவே வெளியேறு -யாழில் ஆர்ப்பாட்டம்

பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தாபய ராஐபக்ஷவின் யாழ். விஐயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக கோத்தாபய ராஐபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்யவுள்ளனர்.

இந் நிலையில் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்கா முன்பாக ஒன்று திரண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோத்தாபயவிற்கு எதிர்ப்பைத் தெரிவித்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது கோத்தாபயவே வெளியேறு, காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, வெள்ளை வேன் முதலாளி கோத்தாவே வெளியேறு, எமது மக்களை கடத்தாதே, ஐ. நா. அமைதிப்படையே வா, சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, இனப்படுகொலையாளி மகிந்த, கோத்தாவை கைது செய், பக்கச்சார்பற்ற விசாரணையை நடாத்து உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version