வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் உறவினர்கள் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
பத்து வருட காலங்களாக போராடியும் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் எதுவித பதிலும் வழங்காத நிலையில் சர்வதேசமாவது நியாயமான பதிலை கூற வேண்டும் எனக் கோரியே இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
திருகோணமலை – அம்பாறை மட்டக்களப்பு – மன்னார் – முல்லைத்தீவு – யாழ்ப்பாணம்- கிளிநொச்சி – மற்றும் வவுனியா- மாவட்டங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர் களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்திலர் கலந்து கொண்டனர்.