வெள்ளவத்தை மயூரா பிளேஸ் உட்பட பல பகுதிகளில் நாளை முதல் காலவரையறையற்ற ஊரடங்கு

மேல் மாகாணத்தில் பல பகுதிகள் நாளை முதல் முடக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை காலை விடுவிக்கப்படவுள்ளன.

வெள்ளவத்தை மயூரா பிளேஸ் உட்பட கமபஹா மாவட்டத்தின் ஐந்து கிராமசேவகர் பிரிவுள், களுத்துறை மாவட்டத்தில் 3 பிரிவுகள் நாளை காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.