Tamil News
Home செய்திகள் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நாமல் ராஜபக்ஸ

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நாமல் ராஜபக்ஸ

உலகெங்கிலும் கொரோனா தாக்கத்திற்குட்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்துடன் கலந்துரையாடப்பட்டு விசேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதலில் எந்த நாட்டிலுள்ளவர்களை அழைத்து வருவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version