வெல்கம் விகாரை தமிழருக்கு சொந்தமானதே

கன்னியா வெல்கம் விகாரைக்குச் சொந்தமானது என பிக்குகள் கூறுகின்றார்கள். ஆனால் வெல்கம் விகாரையே அவர்களுக்கு சொந்தமானது அல்ல.

இலங்கை தமிழ் பௌத்தர்களின் ஒரேயொரு அடையாளச் சின்னம் வெல்கம் விகாரை என்னும் இராஜராஜப் பெரும்பள்ளி.

இங்கு மொத்தமாக 16 தமிழ் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. தமிழருக்குரிய இந்த பௌத்தப் பள்ளி பற்றி பேராசிரியர் பரணவிதான 1954மற்றும் 1960ஆம் ஆண்டு தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

திருகோணமலைக்கு அண்மையில் உள்ளதும் இந்நாளில் நாதனார் கோயில் என அழைக்கப்படுவதுமான புராதனமான வெல்கம் விகாரையின் அடித்தளப் படைகள் திராவிடக் கலைப்பாணியில் அமைந்தவை. இடிந்துள்ள நிலையில் இதுவரை கிடைத்துள்ள ஒரேயொரு தமிழ் பௌத்தப் பள்ளி என்ற காரணத்தினால் அங்குள்ள தொல்பொருள் சின்னங்கள் அனைவரினதும் கவனத்திற்குரியவை.

welcome 2 வெல்கம் விகாரை தமிழருக்கு சொந்தமானதேஇந்த தமிழ் விகாரையின் அடித்தளப் படைகளின் வேலைப்பாடுகள் பொலநறுவையில் சோழர்கள் அமைத்த இந்துக் கோயில்களில் உள்ளவற்றைப் போன்றவையாகும். இவ்வாறு பரணவிதான குறிப்பிட்டுள்ளார்.

எனவே கன்னியா மட்டுமல்ல வெல்கம் விகாரையும் தமிழர்களுக்குச் சொந்தமானவை தான்.

welcom 3 வெல்கம் விகாரை தமிழருக்கு சொந்தமானதே