Tamil News
Home செய்திகள் வீதியை மூட யாழ். மாநகரசபை முயற்சி – மக்கள் எதிர்ப்பு

வீதியை மூட யாழ். மாநகரசபை முயற்சி – மக்கள் எதிர்ப்பு

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நெளுக்குளம் பகுதியில் 505வது குறுக்கு வீதியை மூடுவதற்கு மாநகர சபை எடுத்த முயற்சி அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்காலிகமாக கைவிடப்பட்டது. வீதியை மூட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கடற்கரைக்கு செல்வதற்கான குறுக்கு வீதி யாழ். மாநகர சபையினரால் 2015இல் திறக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. எனினும் 2019 இல் இந்த வீதியை மூடும் உத்தரவுக் கடிதம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.

யாழ்.கடற்கரையை அண்டிய குறுக்கு வீதிகளில் பெரும்பாலாவை யுத்தகாலத்தின் பின்னரும் மூடப்பட்டே இருந்தன. இது கரையோரமாக முகாமிட்டிருக்கும் கடற்படையினரின் பாதுகாப்பிற்காகவேயாகும்.

பொது மக்கள் நடமாட்டம் இருக்குமானால், அந்தப் பகுதியில் கடற்படையினர் முகாம் அமைப்பது சிரமமாக இருக்கும் என்ற நோக்கிலேயே கடற்படையினர் பொது மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காகவும், அந்தப் பகுதி கடலினால் தமது முகாமிற்கு வழங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாகவே யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டத்தை இல்லாமல் செய்தனர்.

 

Exit mobile version