Home செய்திகள் வீடொன்றில் தீடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்.

வீடொன்றில் தீடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று காலை வீடொன்று தீ பிடித்து எரிந்துள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

தீ பரவுவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது இந்த தீ விபத்து மின்சார ஒழுக்குக் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தீ விபத்தினால் வீட்டில் இலத்திரனியல் பொருட்கள் சேதமடைந்துள்ளதுள்ளது

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
DSC03514 வீடொன்றில் தீடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்.

Exit mobile version