Tamil News
Home செய்திகள் விடை பெற்றுச் செல்லும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

விடை பெற்றுச் செல்லும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இலங்கை மக்கள்  அதிருப்தி கொண்டிருப்பதாக இலங்கையிலிருந்து விடை பெற்றுச் செல்லும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்  தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சமாதானம், நல்லிணக்கம் போன்ற விடயங்களில் அரசாங்கம் சில முன்னேற்றமான நகர்வுகளைக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை சுட்டிக் காட்டினார்.

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும், அந்தக் கட்டமைப்புகளை தமது நாட்டிற்குள் செயற்படக் கூடியவாறு புலனாய்வு முகவர்களை தனது நாட்டிற்குள் தயார்ப்படுத்தல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உரிய வேளையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது சரியானது என்றும், ஆனால் மாகாணசபை தேர்தலை பின்போடுவதில் தனது அதிருப்தியையும் தெரிவித்தார்.

Exit mobile version