நேற்று மாலை 6.45 மணியளவில் இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலுடனேயே ஹைஏஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஆனந்தராசா சயந்தன் (வயது 32) அவரின் மகளான அப்சரா என்ற 6 மாத குழந்தையும் உயிரிழந்தனர்.
குழந்தையின் தாயான சயந்தன் பிரியங்கா (வயது 22 என்பவர் படுகாயமடைந்து யாழ். போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸார் விபத்துக் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.