வவுனியா செட்டிகுளத்தில் நினைவேந்தல் நிகழ்வு! (வீடியோ இணைப்பு)

கடந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி 2 ஆம் திகதி வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கபட்ட 52 பேரின், 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செட்டிகுளம் விளையாட்டு மைதானத்தில் இன்றுகாலை இடம்பெற்றது.

செட்டிகுளம் பிரதேச்சபை மற்றும், பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களிற்கு இந்து மற்றும் கிறிஸ்தவ மத குருமாரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் 52 பேர் நினைவாகவும் சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் மதகுருமார்கள்,உயிரிழந்தவர்களின் உறவினர்கள் செட்டிகுளம் பிரதேசசபை தலைவர் உட்பட்ட உறுப்பினர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன் உட்பட இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இனிவரும் காலங்களில் குறித்த நினைவு நாளினை செட்டிகுளம் பகுதியில் துக்கதினமாக அனுஸ்டிப்பதுடன் நினைவு தூபி ஒன்றினையும் அமைக்கவுள்ளதாக செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆ.அந்தோணி இதன்போது தெரிவித்தார்.

02 வவுனியா செட்டிகுளத்தில் நினைவேந்தல் நிகழ்வு! (வீடியோ இணைப்பு) 03 வவுனியா செட்டிகுளத்தில் நினைவேந்தல் நிகழ்வு! (வீடியோ இணைப்பு) 04 வவுனியா செட்டிகுளத்தில் நினைவேந்தல் நிகழ்வு! (வீடியோ இணைப்பு) 05 வவுனியா செட்டிகுளத்தில் நினைவேந்தல் நிகழ்வு! (வீடியோ இணைப்பு) 06 1 வவுனியா செட்டிகுளத்தில் நினைவேந்தல் நிகழ்வு! (வீடியோ இணைப்பு)