Home செய்திகள் வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள்

வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள்

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜெயபாலன் தலைமையில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டதுடன், இவ் வருடம் சிறப்பாக அமைய வேண்டி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர். குறித்த தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர்.
DSC 0813 1 வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள்

இதேபோன்று வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் பாதுகாப்புக்கு மத்தியில் புதுவருடத்தை வரவேற்று அமைதியான முறையில் சிறப்பாக வழிபாடுகள் இடம்பெற்றது.

Exit mobile version