Tamil News
Home செய்திகள் வவுனியாவில் பாரிய விபத்து ஐவர் பலி 25 காயம்

வவுனியாவில் பாரிய விபத்து ஐவர் பலி 25 காயம்

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் வான் சாரதி உட்பட ஐவர் பலியாகியதுடன் 25 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்க்p சென்ற வானும் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளாகிய வானும் அத்தீயில் எரிந்துள்ளது.

இதன்போது வானுக்குள் இருந்த சாரதியும் தீயில் எரிந்தமை குறிப்பிடத்தக்கது.

தீப்பற்றிய வாகனங்களை தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டு தீயினுள் எரிந்த நிலையில் வாகன சாரதியின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஆறுமுகம் தேவராஜா வயது 62, தேவராஜா சுகந்தினி வயது 51, தேவராஜா சுதர்சன் வயது 30, ராமலிங்கம் சேமசுந்தரம் வயது 83 ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியாகியதுடன் வாகன சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் வயது 24 என்ற இளைஞனும் பலியாகியுள்ளார்,

இதேவேளை வானில் பயணித்த சோமசுந்தரம் லக்சனா வயது 29 என்பவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இசசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஒமந்தை பொலிஸார் மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு மேலதிக அசம்பாவிதங்களை நடைபெறாதவாறு தவிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version