வவுனியாவில் சிறப்பான முறையில் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப்பட்டது.
விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக இடம்பெறும் தைப்பொங்கல் நாளில் வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பாக பொங்கல் கொண்டாடப்பட்டதுடன் கிறிஸ்தவ மக்களால் இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திலும் பொங்கல் பொங்கப்பட்டது.
இதேவேளை வர்த்தக நிலைஙகள் மற்றும் இந்துக்களின் வீடுகளிலும் சிறப்பான முறையில் பொற்கல் கொண்டாடப்பட்டிருந்தது.