வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையும், குட்டியும் சடலமாக மீட்பு

வவுனியா – பறயனாளங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்நாட்டி , கணேசபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் யானையும், யானைகுட்டியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

ele 2 1 வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையும், குட்டியும் சடலமாக மீட்பு ele 1 வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையும், குட்டியும் சடலமாக மீட்பு

வவுனியா- கல்நாட்டி பகுதியில் அமைந்துள்ள காணிக்கு நேற்று காலை விவசாயிகள் சிலர் காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த சமயத்தில் உயிரிழந்த நிலையிலிருந்த யானையின் எச்சங்களை கண்டுள்ளனர்.

ele 2 வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையும், குட்டியும் சடலமாக மீட்பு

இதையடுத்து பறயனாளங்குளம் பொலிஸாருக்கு குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று இது குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பத்து நாட்களுக்கு முன்னர் குறித்த யானையும், குட்டியும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யானையின் சில பாகங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களில் விபத்துகளிலோ அல்லது வேறு காரணங்களினாலோ யானைகளின் இறப்பு வீதம் நாட்டில் அதிகரித்து காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.