வவுனியாவில் இரு மாதத்தில் 75 மரணங்கள் – திடீர் மரண விசாரணை அதிகாரி கிசோர்

வவுனியாவில் இரு மாதங்களில் 75 மரணங்களுக்கான மரண விசாரணையை தான் மேற்கொண்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“வவுனியாவில் கடந்த மே மாதம் முதல் ஜூன் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 11 கொரோனா மரணங்கள் உட்பட பல்வேறு மரணங்கள் உள்ளடங்கலாக 75 மரணங்களுக்கான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது” என்றார்.